Singappenne: வெளியே வந்த கருணாகரன்... அக்காவிடம் ஆனந்தி வாங்கிய சத்தியம்
சிங்கப்பெண்ணே சீரியலில் கருணாகரனை மகேஷ் போலிசில் பிடித்துக் கொடுத்துள்ள நிலையில், மித்ரா அவரை வெளியே கொண்டுவந்துள்ளது மகேஷிற்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணமான நபரை தேடும் ஆனந்தி அடுத்தடுத்து எந்தவொரு தகவலும் இல்லாமல் பின்னோக்கி வருகின்றார்.
ஆனால் இதில் கருணாகரன் சம்பந்தப்பட்டுள்ளது மட்டுமே தெரிந்த நிலையில், தற்போது கருணாகரனை போலிசார் கைது செய்தனர்.

இதனைக் கேள்விப்பட்ட மித்ரா மகேஷிற்கு தெரியாமல், அவரது தாயிடம் பேசி கருணாகரனை காவல் நிலையத்திலிருந்து அழைத்து வந்துவிடுகின்றார்.
இந்த விடயம் அறிந்த மகேஷ் கடும் கோபத்தில் மித்ராவை வந்து ஹாஸ்டலில் சந்திக்கின்றார். மேலும் அவரை சத்தம் போடுவதுடன் ஒரு கட்டத்தில் அவர் மீது சந்தேகம் எழுவதாகவும் கூறியுள்ளார். ஆனந்தி மித்ரா மீது நம்பிக்கை வைத்து அவருக்கு ஆதரவாக பேசி வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |