Singappenne: மரணத்தின் விழிம்பில் ஆனந்தி... துளசியின் கோரமுகத்தை அன்பு அறிவாரா?
சிங்கப்பெண்ணே சீரியலில் தேனிலவிற்கு சென்ற ஆனந்தியை இரண்டாவது முறையாக துளசி கொலை செய்வதற்கு முயற்சித்த காட்சி வைரலாகி வருகின்றது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு தனது கழுத்தில் தாலி கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மகேஷின் ஏற்பாடால் தற்போது தேனிலவிற்கு சென்றுள்ளனர்.

அங்கு துளசி தனது வேலையைக் காட்ட வந்துள்ளார். முதன் கொலை முயற்சியினை போட்டிங் செல்லும் போது செயல்படுத்த முயன்றுள்ளார்.
ஆனால் ஆனந்தியை அவரிடமிருந்து எஸ்கேப் ஆகியுள்ள நிலையில், இரண்டாவது முறையாக மீண்டும் கொலை முயற்சியில் இறங்கியுள்ளார். தற்போது மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிடுவதற்கு முயன்றுள்ளார்.
கடந்த முறை போன்று இந்த முறையும் ஆனந்தி அன்பால் காப்பாற்றப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |