Singappenne: ஆனந்தியின் உயிரை எடுக்க வந்த துளசி... அந்தரத்தில் தொங்கிய தருணம்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியைக் கொலை செய்ய வந்த துளசி உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்தரத்தில் தொங்கியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு தனது கழுத்தில் தாலி கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மகேஷின் ஏற்பாட்டால் தற்போது தேனிலவிற்கு சென்றுள்ளனர்.

தேனிலவு சென்ற இடத்திற்கு ரகு மற்றும் கருணாகரன் இருவரும் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மித்ராவை மிரட்டி 20 லட்சம் பணம் வாங்கியுள்ளனர்.
தற்போது தேனிலவு வந்த இடத்திற்கு துளசியும் இரண்டு முறை ஆனந்தியை கொலை செய்வதற்கு திட்டம் தீட்டிய நிலையில், அவருக்கே அது எமனாக மாறியுள்ளது.
அதாவது மலையிலிருந்து ஆனந்தியை தள்ளிவிடுவதற்கு முயற்சித்த துளசி தவறுதலாக அவரே தடுமாறி அந்தரத்தில் தொங்கியுள்ளார். பின்பு அன்பு வந்து அவரைக் காப்பாற்றிய நிலையில், அன்புவிற்கு மாஸ்க் அணிந்து வந்தது துளசி என்று தெரியாமல் சந்தேகம் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |