Singappenne: ஆனந்திக்கு ஆண் தேவதையான அன்பு! மகேஷிடம் மாட்டிக் கொண்ட தருணம்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியிடம் அன்பு ஒரு ஆண் தேவதை என்று கூறியுள்ள நிலையில், இருவரும் மருத்துவமனையில் இருப்பதை மகேஷ் அவதானித்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கும் சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.
கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்கின்றார் ஆனந்தி.
ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ், மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்திரத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.
அன்பும், மகேஷும் ஆனந்தியை காதலித்து வந்த நிலையில், அன்புவை தான் ஆனந்தி காதலிக்கின்றார் என்று தெரிந்ததும், மகேஷ் விலகியுள்ளார்.
ஆனந்தியின் அக்காவின் திருமணத்திற்கு சென்ற போது, ஆனந்தி கர்ப்பமாகியுள்ள விடயம் அனைவருக்கும் தெரிந்துள்ளது.
இந்நிலையில் தனது நிலைக்கு யார் காரணம் என்பதை அறிந்து கொள்ள பல முயற்சிகள் ஆனந்தி எடுத்துவரும் நிலையில், இதற்கு அன்பு முழு ஆதரவு கொடுத்து வருகின்றார்.
தற்போது ஆனந்தியை மருத்துவபரிசோதனைக்கு அன்பு அழைத்துவந்த நிலையில் அவர்களை மகேஷ் பார்த்துள்ளார். மகேஷின் கேள்விக்கு இருவரும் என்ன பதில் அளிக்கப்போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்..
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |