Singappenne: ஆனந்தி கண்ணில் சிக்கிய ரகு... மீண்டும் சூடுபிடிக்கும் கதைகளம்
சிங்கப்பெண்ணே சீரியலில் குழிக்குள் விழுந்த அன்பு மற்றும் ஆனந்தியை காட்டில் வாழ்ந்த மக்கள் மீட்டுள்ள நிலையில், தற்போது ஆனந்தியின் கண்ணில் ரகு சிக்கியுள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி, அன்பு தேனிலவு வந்த இடத்தில் காட்டுக்குள் வழிதப்பியுள்ளனர். அதுமட்டுமின்றி யானைக்கு வெட்டி வைத்திருந்த குழிக்குள் விழுந்துள்ளனர்.
வெளியே வரமுடியாமல் தவித்த இவர்களை காட்டில் வாழ்ந்த மக்கள் காப்பாற்றியுள்ளனர். ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணமான நபரையும் தேடி வருகின்றார்.

கருணாகரன் உடன் வந்த ரகுவை காட்டுவாசி ஒருவரிடம் விட்டுவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார். மயக்கமான ரகு தற்போது மயக்கம் தெளிந்து எஸ்கேப் ஆகியுள்ளார்.
இத்தருணத்தில் ஆனந்தியும் கடவுளிடம் மிகவும் உருகி வேண்டிக்கொண்டிருந்த தருணத்தில் ரகு ஆனந்தியின் கண்ணில் சிக்கியுள்ளார்.
ஆனந்தி கண்ணில் சிக்கிய ரகுவால் கர்ப்பத்திற்கு காரணம் மகேஷ் என்பது வெளியாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |