Singappenne:குழியில் விழுந்த அன்பு ஆனந்தி... ஆனந்தியின் கர்ப்பம் கலையுமா?
சிங்கப்பெண்ணே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்தி இருவரும் பெரிய குழியில் தனியாக விழுந்து மாட்டியுள்ளனர்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி தனது கர்ப்பத்திற்கு காரணம் யார் என்பதை தெரிந்து கொள்ள பல முயற்சிகளை எடுத்து வருகின்றார்.
அன்பு தனது கழுத்தில் தாலி கட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், மகேஷின் ஏற்பாட்டால் தற்போது தேனிலவிற்கு சென்றுள்ளனர்.
தேனிலவு சென்ற இடத்திற்கு ரகு மற்றும் கருணாகரன் இருவரும் வந்துள்ளனர். இவர்கள் இருவரும் மித்ராவை மிரட்டி 20 லட்சம் பணம் வாங்கியுள்ளனர்.
ஆனந்தி தேனிலவு வந்த அதே இடத்திற்கு துளசியும் ஆனந்தியை தீர்த்து கட்ட பின்னாடியே வந்துள்ளார். அதிலும் ஆனந்தியை துளசி இரண்டு தடவை கொல்ல முயன்றும் அது அவருக்கு முடியாத காரியமாகவே உள்ளது.
இந்த நிலையில் தேனிலவிற்கு சென்ற அனைவரும் அருவியில் குளிக்க சென்று அங்கே குளித்து முடிந்ததும் இளைப்பாறிய நேரத்தில் அங்கே ஏதோ ஒரு மிருகத்தின் சத்தம் கேட்டு ஆளுக்கொரு பக்கமாக ஓடுகின்றனர்.
இப்படி ஓடும் சமயத்தில் ஆனந்தியும் அன்பும் ஓடிய பக்கம் ஒரு குழி இருந்துள்ளது. அது ஏதோ ஒரு மிருகத்தை பிடிக்க வெட்டப்பட்ட குழி போல தெரிகிறது. அந்த குழியில் இருவரும் விழந்து தனியாக மாட்டி கொண்டனர்.
இந்த சீரியலில் இனி என்ன நடக்கப்போகின்றது ஆனந்தியின் குழந்தை கலையப்போகின்றதா? இல்லை அன்புவிற்கும் ஆனந்திக்கும் இடையில் ஒரு புரிதல் உருவாகுமா என்பது நாளை பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |