Singappenne: துளசியை திருமணம் செய்யும் அன்பு.. சத்தியம் வாங்கிய அம்மா
துளசியை அன்பு திருமணம் செய்துக் கொள்ளப்போவதாக அவருடைய அம்மா கோயிலில் வைத்து சத்தியம் வாங்கிக் கொள்கிறார்.
சிங்கப்பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியல் இல்லத்தரசிகள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அன்பு மற்றும் மகேஷ் இருவரும் ஆனந்தியை காதலித்து வருகின்றனர். இவர்களில் ஆனந்தி, அன்புவை காதலிக்கிறார். இந்த விடயம் தெரிந்து கொண்ட மகேஷ் ஒதுங்கி போயுள்ளார்.
இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்பம் அவரது அக்கா திருமணத்தின் போது கிராமத்தில் அனைவருக்கும் தெரிந்து விடுகிறது. தற்போது ஆனந்தி வேலைச் செய்யும் இடத்திலுள்ள அனைவருக்கும் தெரிந்து விட்டது. ஆனாலும் ஆனந்தி மீது தவறு இருக்காது என தெரிந்து அங்குள்ளவர்கள் ஆறுதலாக இருக்கிறார்கள்.
கர்ப்பத்திற்கு யார் காரணம் என தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கும் ஆனந்தி நண்பனை வைத்து ரகுவை பிடித்து விடலாம் என முயற்சி செய்த போது மித்ரா நடுவில் வந்து அனைத்தையும் மாற்றி விடுகிறார்.
துளசியை திருமணம் செய்யும் அன்பு
இந்த நிலையில், அன்புக்கு எப்படியாவது திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என முயற்சி செய்த அவருடைய அம்மாவை அன்பு கடுமையாக திட்டி விடுகிறார். இதனால் மனம் உடைந்து போன அவருடைய அம்மா வீட்டை விட்டு வெளியேறி, அன்புக்கு புது பயத்தை காட்டி விடுகிறார்.
ஒருவழியாக அன்பு அம்மாவை கண்டுபிடித்த குடும்பத்தினரிடம் அன்பு துளசி திருமணம் நடந்ததால் தான் நான் வீட்டிற்கு வருவேன் என கண்டிப்புடன் கூறி விடுகிறார். மனம் உடைந்து போன அன்பு, ஆனந்தியை எப்படி விட்டுக் கொடுப்பது என தெரியாமல் குழம்பி போய் நிற்கும் பொழுது ஆனந்தி அவர் வாயால், “ அன்பு துளசியை திருமணம் செய்து கொள்வார்..” எனக் கூறுகிறார்.
அப்போது அம்மா,“ எனக்கு அதில் நம்பிக்கை இல்லை...” என்கிறார். இந்த வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் துளசி, அன்புவிடம் மெதுவாக பேசி சத்தியம் செய்ய தூண்டுகிறார். அவரும் துளசி மீதுள்ள நம்பிக்கையில் சத்தியம் செய்கிறார்.
அன்பு இல்லாமல் ஆனந்தி செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |