சமையலறையில் இருக்கும் பல்லி தொல்லையை விரட்ட வேண்டுமா? இந்த ஒரு மசாலா போதும்
பல வீடுகளில் பல்லிகளின் பயம் அதிகமாகும். ஒரு பல்லியைப் பார்த்தவுடன் ஒருவருக்கு அருவருப்பாக இருக்கிறது. அதிலும் இந்த பல்லி இனங்கள் மிகவும் விஷமானது.
அது தற்செயலாக ஏதேனும் உணவுப் பொருளில் விழுந்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கள் வீடுகளுக்குள் பல்லி நுழையாமல் இருக்க பல வகையான ரசாயனங்களைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் இதற்கு வீட்டில் இருக்கும் மசாலாவை பயன்படுத்தி வீட்டு வைத்தியம் மூலமே பயன்படுத்தலாம். அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பல்லிகளை விரட்ட என்ன செய்வது?
உங்கள் வீட்டில் எங்கு பல்லியைக் கண்டாலும், சிறிது இலவங்கப்பட்டை பொடியை எடுத்து அங்கு தூவ வேண்டும். இதை சமையலறை மற்றும் அலுமாரிகளுக்கு உள்ளே அல்லது பின்னால் தெளிக்கலாம்.
இதை மசாலாவாக இல்லாமல் கப் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியை கலக்கி அந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் போட்டு நன்கு கலக்கவும்.
இப்போது இந்த ஸ்ப்ரேயை பல்லிகளைக் காணும் இடத்தில் தெளிக்கவும். சில நாட்கள் அதைப் பயன்படுத்திய பின்னர் இப்படி மட்டும் செய்தால் பல்லிகள் இருக்காது.
பல்லிகளால் உண்டாகும் பாதிப்பு
பல்லிகள் அவற்றின் சிறுநீர் மற்றும் மலத்தால் உணவுப்பொருட்களின் மேற்பரப்புகளை மாசுபடுத்தும். இதன் காரணமாக வயிற்று தொற்று, உணவு விஷம் மற்றும் பல நோய்களை ஏற்படுத்தும்.
பல்லிகள் உணவு மற்றும் பானங்களை மாசுபடுத்தும். சிலருக்கு பல்லியின் உதிர்ந்த தோல் செதில்கள் அல்லது அவற்றின் மலம் ஆகியவற்றால் ஒவ்வாமை ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
