தலைமுடிக்கு அடிக்கடி சாயம் பூசுவது உயிருக்கு ஆபத்தானதா? அவசியம் தெரிய வேண்டியது
இன்றைய காலகட்டத்தில், பலர் தங்களது தலைமுடிக்கு நிறங்களைப் பயன்படுத்தி ஃபேஷனை பின்பற்றுகிறார்கள். நவீன தோற்றம், தனித்துவம், ஸ்டைல் இவை எல்லாவற்றிற்கும் நிறமூட்டும் நிற சாயங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஆனால், இந்த அழகு முயற்சியின் பின்னால் உடல்நலத்திற்கு மறைந்துள்ள ஆபத்துகள் பலருக்கும் தெரியாமல் போய்விடுகின்றன.
முடி நிறமாக மாற பல தயாரிப்புகளில் உள்ள இரசாயனங்கள், சிறிது காலத்திற்கு அழகாக தோன்றச் செய்தாலும், நீண்டகாலத்தில் உங்கள் உடலையும் உட்புற உறுப்புகளையும் மெதுவாக பாதிக்கக்கூடியவை.
இவை தலை சோர்வு, முடி உதிர்வு தோல் கீல்வாதம், எரிச்சல் ஒட்டுமொத்தமாக ஹார்மோன் குழப்பம், சில நேரங்களில் விஷச் சேர்க்கை போல் செயல்படும். இது உடலை பெரிதும் பாதிக்க கூடியது.
தலைமுடி சாயத்தின் தீமைகள்
இணையத்திலும், விளம்பரங்களிலும் பார்த்து பலர் முடி நிறங்களை தேர்வு செய்கிறார்கள். ஆனால் இதில் உள்ள ஆபத்தான ரசாயனங்கள் பற்றி பலருக்கும் முழுமையான அறிவில்லை.
அதில் மிக ஆபத்தான ரசாயனமாகக் கருதப்படும் ஒன்று தான் பாரா-ஃபெனிலெனெடியமைன் (PPD). இந்த வேதிப்பொருள், முடிக்கு கருமை நிறத்தையும் நீடித்த பொலிவையும் தருகிறது.
ஆனால் அதே நேரத்தில், இது கடுமையான ஒவ்வாமை, தேறல், அழற்சி, சில நேரங்களில் தோல் புண்கள் போன்ற எதிர்வினைகளை உருவாக்கும் ஆபத்தும் உடையது.
இதற்கு மேலாக, முடி நிறங்களில் அடிக்கடி சேர்க்கப்படும் பிற ரசாயனங்களும் உங்கள் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியவை.
இதனால் அம்மோனியா – சுவாச பாதையில் பாதிப்பு, ஹைட்ரஜன் பெராக்சைடு – தோல் எரிச்சல், கண் அழற்சி லீட் அசிடேட் – நரம்பு மண்டல பாதிப்பு, விஷச்சேர்க்கை ரெசோர்சினோல் – ஹார்மோன்களின் இயல்பை பாதிக்கும் வாய்ப்பு போன்றவை வரும்.
தலைமுடிக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
PPD, முடிக்கு கருமை மற்றும் நீடித்த நிறம் தரும் வகையில் செயல்படுகிறது. ஆனால் இது அரிப்பு, எரிதல், சிவத்தல், வீக்கம் போன்ற தோல் ஒவ்வாமை எதிர்வினைகளை ஏற்படுத்தும்.
PPD, சிலருக்கு அனாபிலாக்ஸிஸ் எனப்படும் தீவிரமான உயிருக்கு ஆபத்தான அலர்ஜி தாக்கத்தையும் உருவாக்கக்கூடும். இது உடனடி மருத்துவ உதவி தேவைப்படும் அவசர நிலையாகும்.
அம்மோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்சைடு போன்ற வேதிப்பொருட்கள், முடியை வறண்ட, உயிரற்ற, பலவீனமான நிலைக்கு கொண்டு செல்லும் இது நேரடியாக முடி உதிர்தலையும் அதிகரிக்கக்கூடும்.
இதன் காரணமாக இந்த பதிவின் நோக்கப்படி மக்கள் அனைவரும் தங்கள் தலைமுடியை இயற்கை பொருட்களை வைத்து பராமரிப்பது அவசியம். இதுபோன்ற கெமிக்கல்கள் உடல் நலத்திற்கு கேடு தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
