உயிரை பறிக்கும் தக்காளி சாஸ்...தினமும் சாப்பிட்டால் இவ்வளவு ஆபத்தா? எச்சரிக்கை!
தக்காளி சாஸ் இன்று பலரும் விரும்பி சாப்பிடும் ஓர் உணவு பொருளாகும்.
பாட்டிலில் அடைக்கப்பட்ட சாஸ் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அதிக அளவில் பதப்படுத்திகளும் ரசாயனப் பொருள்களும் சேர்க்கப்படுகின்றன.
வெறுமனே சுவையைக் கூட்டுவதற்காக மட்டுமே சேர்க்கப்படுகின்ற இந்த ரசாயனப் பொருள்கள் உடலுக்குத் தீமை செய்வனவே தவிர நன்மை செய்வன அல்ல.
பொதுவாக தக்காளி சாஸில் அதிகமாக சர்க்கரை, உப்பு, கார்ன் சிரப், ஃபிரக்டோஸ் மற்றும் வேறு சில பதப்படுத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இவற்றை தொடர்ந்து சாப்பிடுவதால் கிடைக்கும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
- தக்காளியில் சிட்ரிக் மற்றும் மாலிக் அமிலங்கள் அதிக அளவில் இருப்பது நமக்குத் தெரிந்ததே. அவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்றில் அமிலத் தன்மை அதிகரித்தல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
- தக்காளி சாஸில் அதிக அளவில் சர்க்கரையும் மற்றும் பதப்படுத்திகளும் சேர்க்கப்படுகின்றன. இது இயல்பாவே உடல் பருமனை ஏற்படுத்த வழிவகை செய்கிறது
- தக்காளி சாஸ் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடலில் இன்சுலின் சுரக்கும் அளவும் குறைந்துவிடுமாம்.
- அடிக்கடி தக்காளி சாஸ் பழக்கம் இருந்தால் அது நம்முடைய உடலில் ப்ரக்டோஸின் அளவை அதிகரிக்கச் செய்து விடும்.
-
கார்ன் சிரப், கெட்சப் போன்றவை நம்முடைய உடலில் ட்ரைகிளிசரைடுகளை அதிகரிக்கச் செய்வதால் இதய நோய்கள் ஏற்படுவது அதிகரிக்கும்.
- மூட்டுவலி, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- தக்காளி சாஸில் அதை பதப்படுத்தி வைப்பதற்கான ஏராளமான உப்பும், வெஜிடபிள் ஆயிலும் அவற்றோடு சர்க்கரை போன்ற பதப்படுத்திகள் சேர்க்கப்படுகின்றன.
- அதிக அளவிலான சோடியம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ளும்போது, அது நம்முடைய உடலிலும் சோடியத்தின் அளவை மிக அதிகமாக்கிவிடும்.
- உடலில் அதிக அளவில் சோடியம் சேருவதால், சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தூண்டுகிறது.