இயக்குனர் ஷங்கரின் மருமகன் இப்படிப்பட்டவரா? அதிரடியாக எழுந்த குற்றச்சாட்டு!
பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் மருமகன் ரோஹித் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரியை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்காக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.
ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கும், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோகித் என்பவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் இயக்குனர் சங்கரின் மருமகன் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள சம்பவம் தற்போது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.