கொரோனாவால் அடுத்த நடிகர் தீவிர சிகிச்சையில் அனுமதி! அதிர்ச்சியில் ரசிகர்கள்
கொரோனாவின் கொடூரத்தால், பல திரை பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். ஏற்கனவே இன்று காலையிலேயே பிரபல இயக்குனர் அருண் ராஜாகாமராஜின் மனைவி சிந்துஜா மற்றும் நடிகர் நிதீஷ் வீரா
ஆகியோர், அடுத்தடுத்து கொரோனவால் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் ஒரு பிரபலம் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாராம்.
மேலும், இவர் பல படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை அம்மா கிரியேஷன்ஸ் சிவா மிகவும் உருக்கமாக தெரிவித்துள்ளார்.
அதில், கடந்த 36 வருட கால நண்பர், அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட் கொரோனவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் திவிர சிகிச்சையில் உள்ளார்.
அவர் மீண்டு வர அனைவரும் பிராத்திக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று பதிவு செய்துள்ளார்.
உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளோடு இருந்தாலும், அடுத்தடுத்து பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.