பள்ளி மாணவிகளிடம் வன்புணர்வு சீண்டல்... மருத்துவமனையிலிருந்து எஸ்கேப் ஆன சிவசங்கர் பாபா
பள்ளி மாணவிகளுக்கு வன்புணர்வு தொந்தரவு கொடுத்த சிவசங்கர் பாபா மருத்துவமனையிலிருந்து தப்பிஓடியுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் ஸ்ரீ ராமராஜ்யா என்ற பெயரில் ஆசிரமம் நடத்தி வருபவர் சிவசங்கர் பாபா(72). கடந்த 20 ஆண்டுகளாக கேளம்பாகத்தில் சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியை நடத்தி வருகிறார்.
இவர் இந்தப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு வன்புணர்வு தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்ததையடுத்து, போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் பொலிசார் சிவசங்கர் பாபாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சிபிசிஐடி பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதனை தொடர்ந்து சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி தனிப்படை பொலிசார் இன்று மருத்துவமனைக்கு சென்ற போது அங்கிருந்து சிவசங்கர் பாபா தப்பிச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு எங்கும் தப்பிச்செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி பொலிசார் நேற்று லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.