திருநங்கை மகளுடன் நடிகை ஷகிலா எடுத்த போட்டோ ஷுட்... அன்னையர் தினத்தின் வேற லெவல் அசத்தல் புகைப்படம்
நடிகை ஷகிலா தனது வளர்ப்பு மகளுடன் எடுத்துக்கொண்டு போட்டோஷுட் தற்போது ரசிகர்களை பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சினிமா உலகில் கவர்ச்சி கன்னியாக வலம்வரும் ஷகிலா மலையாள படங்களில் கவர்ச்சியாக நடிக்க ஆரம்பித்தார். இன்றும் அவரது பெயரைக் கூறினால் முதலில் நினைவுக்கு அவரது கவர்ச்சியான நடிப்பு தான்.
கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சி தான்.
திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் ஷகிலா மிளா என்ற திருநங்கை பெண்ணை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
ஆடை வடிவமைப்பாளராக இருக்கும் மிளா, சீரியல்களிலும் நடித்துள்ளார். தனது சொந்த அம்மாவை விட ஷகிலா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் மிளா, ஷகிலா எங்கு சென்றாலும் தனது மகளுடன் தான் சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இன்று அன்னையர் தினத்தை முன்னிட்டு ஷகீலா மற்றும் மிளா இருவரும் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்னனர். அதில் ஷகீலா, மேனகாவாகவும், மிளா சகுந்தாலாவாகவும் கெட்டப் போட்டு அசந்தியுள்ளனர்.

