சீமான் வாங்கிய ஓட்டுகள்.. திமுக வெற்றி குறித்து பேசியது என்ன?
தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளையும், இடைத்தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகளையும் எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது.
தமிழகத்தில் மொத்தம் அமைக்கப்பட்டுள்ள 75 வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதலில் தபால் வாக்குகளும் பின்னர் வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், நாம் தமிழர் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும், இயக்குநரும், நடிகருமான சீமான் சென்னை திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிட்டார்.
இந்நிலையில் பிற்பகல் நிலவரப்படி சீமான் 14,825 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார். இவருடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் சங்கர் 38189 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். மேலும் இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் கே.குப்பன் 28340 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் மாலை 5 மணி நிலவரப்படி திமுக கூட்டணி 156 இடங்களிலும், அதிமுக கூட்டணி 77 இடங்களிலும் மநீம ஒரு இடத்திலும் முன்னிலையில் இருக்கின்றன.
திமுக-வின் வெற்றி குறித்து ஆதங்கமாக தனது கருத்தினை வெளியிட்டுள்ளார். பணத்தினைக் கொடுத்து மக்களின் நிலையை மாற்றியுள்ளனர். இம்மாதிரியான நிலைமை இனிவரும் காலத்தில் கட்டாயம் மாற வேண்டும். வறுமையில் இருந்த மக்களுக்கு அவர்கள் கொடுத்த பணம் பெரிய தொகை என சீமான் கூறியுள்ளார்.