குகைப்பாதையில் கேட்ட அலறல் சத்தம்! மலையிலிருந்து விழுந்த லாரியினால் ரயில் தடம் புரண்டு 36 பேர் பலி
தைவானில் கோர ரயில் விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் 36 பேர் பலியாக, குறைந்தது 72 பேர் காயமடைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்த விரைவு ரயில் தைபேயிலிருந்து தைத்துங்குக்கு சுமார் 350 சுற்றுலா பயணிகளுடன் சென்றது.
கிழக்கு தைவானின் ஹுவாலியன் வடக்குப் பகுதியில் குகை ஒன்றில் செல்லும் போது இந்த ரயில் தடம்புரண்டுள்ளது. குகையில் ரயில் பெட்டிகள் தடம்புரண்டதால் போகும் வழி அடைக்கப்பட்டு மீட்புப் பணிகள் கடும் சிக்கலாகியுள்ளன.
Worst rail disaster in Taiwan in four decades. Condolence to the unfortunate families. Hope my friends in Taiwan are ok. https://t.co/2w38V4jV47
— YOUNG@HEART (@victorsqyang) April 2, 2021
விபத்துக்குப் பிறகு ரயிலின் முதல் 4 பெட்டிகளிலிருந்து சுமார் 80-90 பேரை மீட்டுள்ளனர். குகைப்பாதையில் சிக்கிய பெட்டிக்குள்ளிலிருந்து குழந்தைகளும் பெண்களும் அலறும் சப்தம் கேட்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் குலைநடுங்கச் செய்கின்றன.
அதிகாரபூர்வ செண்ட்ரல் நியூஸ் ஏஜென்சி தகவல்களின் படி சரியாக நிறுத்தப்படாத லாரி ஒன்று மலையிலிருந்து ரயில் பாதையில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இதில் மோதிதான் ரயில் தடம்புரண்டதாக கூறப்படுகிறது.