டிசம்பருக்குள் 4 முறை நிலையை மாறும் சனி : இந்த நான்கு ராசிகளுக்கு ஜாக்பாட் உறுதி!
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க சாதக பாதக பலன்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக சனி பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகின்றது. காரணம் சனிபகவான் நீதியின் கடவுளாக திகழ்கின்றார்.

சனிபகவான் நாம் செய்யும் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப வாழும் காலத்திலேயே அதற்கான பலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார் என நம்பப்படுகின்றது.
அதனால் சனி பெயர்ச்சி என்றாலே ஒரு வித அச்ச உணர்வு பெரும்பாலானவர்கள் மத்தியில் காணப்புடுகின்றது.
அந்தவகையில், ஜூலை முதல் டிசம்பர் வரை 4 முறை சனியின் நிலையில் மாற்றம் ஏற்படப்போகிறது என கணிக்கப்பட்டுள்ளது. ஜூலை 2, 2026 - இந்நாளில் சனி பகவான் ரேவதி நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் நுழைந்து பயணிக்கவுள்ளார். இந்த ரேவதி நட்சத்திரத்தின் அதிபதி புதன். ஜூலை 27, 2026 - இந்நாளில் சனி பகவான் மீன ராசியில் தனது வக்ர பயணத்தை ஆரம்பிக்கின்றார்.

இந்த வக்ர நிலையில் சனி பகவான் சுமார் 138 நாட்கள் வரை இருப்பார். இக்காலத்தில் சனியின் தாக்கம் கடுமையாக இருக்கும்.
அதனை தொடர்ந்து, அக்டோபர் 9, 2026 - இந்நாளில் சனி பகவான் வக்ர நிலையில் ரேவதி நட்சத்திரத்தில் இருந்து திரும்பி உத்திரட்டாதி நட்சத்திரத்திற்குள் நுழைவார்.
டிசம்பர் 11, 2026 - இந்நாளில் சனி பகவானின் வக்ர பயணம் முடிவுக்கு வந்து, வக்ர நிவர்த்தி அடைந்து நேர்கதியில் மீண்டும் பயணத்தை ஆரம்பிக்கின்றார். அதன் தாக்கமானது அனைத்து ராசிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தினாலும் பல வழிகளிலும் சாதக பலன்களை பெறப்போகும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

சனி பகவானின் இந்த நிலை மாற்றத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு புதிய நம்பிக்கையும் உற்சாகமும் ஏற்படும். நீண்ட காலமாக வேலை தேடி வந்தவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.
தொழிலில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வணிகர்களுக்கு அதிக லாபம் தரக்கூடிய புதிய ஒப்பந்தங்கள் அமைய வாய்ப்புள்ளது.சமூகத்தில் அவர்களின் மதிப்பும் மரியாதையும் உயரும்.
தனுசு

சனி பகவானின் இந்த நிலை மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டகரமான பலன்களை வழங்கும்.
வணிகர்களுக்கு பெரிய ஒப்பந்தங்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. புதிய தொழில் தொடங்க திட்டமிட்டிருந்தால், அதற்கான சிறந்த காலமாக இது அமையும்.நல்ல நிதி ஆதாயங்கள் கிடைப்பதன் மூலம் பொருளாதார நிலையில் பாரிய ஏற்றம் உண்டாகும்.
நீண்ட நாட்களாக இருந்த கடன் சுமைகள் குறையும். பணப் பிரச்சனைகள் தீர்ந்து மனநிம்மதி கிடைக்கும். திருமண வாழ்க்ககை மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்ததாக மாறும்.
ரிஷபம்

சனி பகவானின் இந்த நிலை மாற்றத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாயில்கள் திறக்கப்படும்.
பணியாளர்களுக்கு பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். தம்பதியினர் இடையில் காதல் அதிகரிக்கும்.
துலாம்

சனி பகவானின் இந்த நிலை மாற்றத்தால் துலாம் ராசிக்காரர்கள் சனியின் சிறப்பான அருளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
வேலை மாற்றம் குறித்து யோசித்து வந்தவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவாக இருக்கும். வெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு தொழிலில் வெற்றியும் நிதி முன்னேற்றமும் கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |