மீன ராசியில் வக்ர பெயர்ச்சியாகும் சனிபகவான் : இந்த ராசிகளுக்கு சோதனை காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை!
ஜோதிட சாஸ்திரத்தில் சனிபகவான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் சக்திவாய்ந்த கிரகமாகக் கருதப்படுகிறார். நவகிரகங்களில் மிகவும் மெதுவாகச் சஞ்சரிக்கும் கிரகம் சனிபகவான் என்பதால், அவரது ஒவ்வொரு ராசி மாற்றமும், இயக்க மாற்றமும் ஜோதிட ரீதியாக அதிக கவனத்தைப் பெறுகிறது.
சனி நீதியின் கடவுள் என்பதால், ஒவ்வொருவரின் செயல்களுக்குமான கரும பலலன்களை பாரபட்சம் இன்றி கொடுத்துவிடுவார் என நம்பப்படுகின்றது.

குறிப்பாக, சனியின் வக்ர பெயர்ச்சியானது பலரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும், சவால்களையும், சிலருக்கு சாதகமான பலன்களையும் ஏற்படுத்தும்.
அந்தவகையில் ஜோதிடக் கணிப்புகளின்படி, வரும் ஜூலை 27 ஆம் தேதி சனிபகவான் மீன ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்க உள்ளார். இந்த வக்ர நிலை டிசம்பர் 11 வரை நீடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னர் சனிபகவான் மீண்டும் நேரடி இயக்கத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சனிபகவானின் இந்த இயக்க மாற்றம் 12 ராசிகளிலும் ஏதோ ஒரு வகையில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், எந்த ராசியினருக்கு பாதக விளைவுகளை கொடுக்கப்போகின்றது என்பது குறித்து விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்

மேஷ ராசிக்காரர்கள் தற்போது ஏழரைச் சனியின் முதல் கட்டத்தில் உள்ளனர். சனியின் வக்ர இயக்கத்தால் பணியிடத்தில் ஏற்றத்தாழ்வுகள், சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் மற்றும் வேலைப்பளு அதிகரிப்பு போன்ற சவால்ககளை அனுபவிக்க நேரிடும்.
பணம் தொடர்பான பிரச்சினைகள் அதிகரிக்கும். எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால், எந்த முடிவையும் அவசரப்படாமல் நன்கு யோசித்து எடுப்பது அவசியம்.
ஆரோக்கிய பிரச்சினைகளால் பணியில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். சிலருக்கு தனிப்பட்ட வாழ்க்கை அல்லது திருமண வாழ்க்கையி்ல் கருத்து வேறுபாடுகளால் சிக்கல்கள் உருவாக வாய்ப்புள்ளது. எனவே வார்த்கைளில் கவனம் தேவை.
கும்பம்

கும்ப ராசிக்காரர்கள் தற்போது ஏழரைச் சனியின் மூன்றாவது மற்றும் இறுதிக்கட்டத்தில் உள்ளனர். இந்தக் காலகட்டத்தில் பணம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் எச்சரிக்கை அவசியம்.
குறிப்பாக புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. அவசரமாக எடுக்கும் முடிவுகள் நிதி இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். அதேபோல், கவனக்குறைவு தொழில் முன்னேற்றத்தையும் பாதிக்கலாம்.
ஆரோக்கியத்திலும் சில சவால்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் உடல்நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். அரசு தொடர்பான பணிகளில் தாமதம் அல்லது தடைகள் ஏற்படலாம்.
பயணங்கள் மற்றும் வணிக நடவடிக்கைகளிலும் எதிர்பாராத இழப்புகள் உருவாகக்கூடும். மன அழுத்தம் மற்றும் பதற்றம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அமைதியாகவும் நிதானமாகவும் செயல்படுவது நல்லது.
மீனம்

மீன ராசிக்காரர்கள் தற்போது ஏழரைச் சனியின் இரண்டாம் கட்டத்தில் உள்ளனர். இந்தக் கட்டம் பொதுவாகவே மிகவும் சவாலான காலமாகக் கருதப்படுகிறது.
தொழிலில் தடைகள், நீண்டகால இலக்குகளை அடைவதில் தாமதம் மற்றும் மன அழுத்தம் அதிகரித்தல் போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம். நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் கருத்து வேறுபாடுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
கோபத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால், குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம். நிதி நெருக்கடிகளும் அதிகரிக்கக்கூடும்.எந்த விஷயத்திலும் முழுமையான தகவலை அறியாமல் தலையிடுவதைத் தவிர்ப்பது சிறப்பு.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |