138 நாட்கள் வக்ர நிலையில் சனி: இந்த ராசிகளை துன்பம் வாட்டப்போகுது ஜாக்கிரதை!
ஜோதிடத்தில் நவகிரகங்களின் பெயர்ச்சி ராசிபலன்களில் முக்கிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, நீதியின் கடவுளாகக் கருதப்படும் சனி பகவானின் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
சனி வக்ர நிலையில் இருக்கும் காலம், 12 ராசிகளின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த தாக்கம் சிலருக்கு சாதகமான பலன்களையும், சிலருக்கு சவால்களையும் உருவாக்கக்கூடும்.

இந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி முதல் சனி வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்குகிறார். இந்த நிலை டிசம்பர் 11, 2026 வரை நீடிக்கும். அதாவது, சுமார் 138 நாட்கள் சனி வக்ர நிலையில் இருப்பார்.
ஜோதிட கணிப்பின்படி, இந்த காலகட்டம் அனைத்து ராசிகளின் வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க சாதக, பாதக தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பாக இந்த ராசிக்காரர்களுக்கு சற்று சவாலானதாக அமையக்கூடும்.
ரிஷபம்

சனியின் வக்ர இயக்கம் ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் சவால்களை உருவாக்கலாம். பணியிடத்தில் அதிகமாக உழைத்தாலும், அதற்கேற்ற பலன்கள் உடனடியாக பெற முடியாத நிலை இருக்கும்.
தேவையற்ற செலவுகள் அதிகரித்து, நிதிநிலையை பாதிக்கக்கூடும். சிலர் எதிராக செயல்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பணம் தொடர்பான முடிவுகளை இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனத்துடன் எடுக்க வேண்டும். யாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
கன்னி

கன்னி ராசிக்காரர்கள் நிதி விவகாரங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய காலமாக இது இருக்கும். எதிர்பாராத செலவுகள் அல்லது நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
கூட்டாண்மை தொழில்களில் இருப்பவர்கள் எந்த முடிவையும் ஆராய்ந்து எடுக்க வேண்டும்.திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் உருவாகலாம்.
மற்றவர்களின் ஆலோசனையால் தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பது அவசியம். உடல்நலம் சர்ந்த வி்டயங்களில் அலட்சியமாக இருப்பதை தவிரக்க வேண்டும்.
விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். சிறிய உடல்நலக் குறைபாடுகளைக் கூட அலட்சியப்படுத்தினால், பின்னர் பெரிய பிரச்சனைகளாக மாறக்கூடும்.
பணியிடத்தில் போட்டி அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த சிலர் முயற்சிக்கக்கூடும். எனவே, செயல்பாடுகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவது அவசியம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் அல்லது சிறிய தகராறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது எனவே குடும்பத்தாருடன் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |