ஜட்டியுடன் அடிவாங்கிய ஆர்யா: கண்ணீர் விட்டு கதறிய மனைவி சாயிஷா! வெளியான ரகசியம்
நடிகர் ஆர்யாவின் நடிப்பில் இணையத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
இத்திரைப்படம் 1975 காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஆர்யா உடல் எடையை அதிகரித்தும், உடல் எடையினைக் குறைத்தும் பயங்கர கஷ்டப்பட்டதோடு, கடுமையான உடற்பயிற்சியும் செய்துள்ளார். அதுமட்டுமின்றி 7 நாட்கள் தண்ணீர் கூட குடிக்காமல் ஜட்டியுடன் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் குறித்த படத்தில் சண்டை காட்சிகள் உண்மையாகவே எடுக்கப்பட்டது என்றும், ஆர்யா இதில் ரெஸ்ட் எடுக்காமல தொடர்ந்து அடிவாங்கியுள்ளாராம்.
இவ்வளவு கடுமையான உழைப்பினை இப்படத்திற்கு போட்டுள்ளதை அவதானித்த ஆர்யாவின் மனைவி சாயிஷா கதறி அழுதுள்ளாராம். இதனை ஆர்யாவே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
ஆர்யாவிற்கு குறித்த திரைப்படம் ஒரு மைல் கல்லாக அமையும் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.