பவதாரணியின் 'மயில் போல பொண்ணு ஒன்ணு' பாடலை பாடி மெய்கிலிர்க்க வைத்த கோபிகா...சோகத்தில் சரிகமப மேடை
பிரபல தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டு வருகின்றது.
சரிகமப நிகழ்ச்சி
இந்த போட்டியில் கலந்துகொண்ட அனைவருமே திறமை வாய்ந்தவர்கள் யாரும் யாருக்கும் சலித்தவர்கள் இல்லை. இந்த சரிகமப ஆடிஷன் மூலம் மொத்தமாக 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் கடந்த வாரம் 12 போட்டியாளர்கள் பாடி முடித்துள்ளனர்.
மீதி 12 பேரில் நேற்றைய தினம் ஒரு பகுதியினர் பாடி முடிந்துள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு ஆரம்பமாக உள்ள சரிகமப நிகழ்ச்சியின் ப்ரமோ தற்போது வெளியாகி உள்ளது.
இந்த நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கார்த்திக் ராஜா கலந்துகொண்டுள்ளார். இதன்போது கார்த்திக் ராஜாவின் தங்கை பாடகி பவதாரணியின் பிரபலமான பாடல் “மயில் போல பொண்ணு ஒன்ணு' பாடலை பாடி பாடகி பவதாரணியின் நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்தார் போட்டியாளர் கோபிகா.
இதன்போது அரங்கத்தில் உள்ள அனைவரும் பாடகி பவதாரணிக்கு மௌன அஞ்சலி செலுத்தினர். இதன்படி சோகத்தில் ஆழ்ந்த மேடையாக இன்றைய சரிகமப ப்ரமோ வெளியாகி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |