தினமும் அழுகை இருக்கும்.. சரிகமபவில் திரைக்கு பின்னால் இருக்கும் கண்ணீர்
சரிகமபா ஷோவில் திரைக்கு பின்னால் இருக்கும் வலிகள் குறித்து இலங்கை வந்த கலைஞர்கள் பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இலங்கை வருகை
பிரபல தொலைக்காட்சியில் பலரின் கவனத்தை ஈர்த்து முன்னிலையில் இருக்கும் நிகழ்ச்சி தான் சரிகமபா.
இசை உலகில் சாதிக்க நினைக்கும் சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவருக்கும் ஒரு வாய்ப்பை உருவாக்கி, மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் ஒரு ஊடகமாக இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் கொண்டாடப்படுகிறது.
தற்போது பெரியவர்களுக்கான சுற்றுகள் ஆரம்பிக்கப்பட்டு, தெரிவுகள் முடிந்துள்ளன. இதில் இலங்கையை சார்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இப்படியொரு நிலையில், 𝗦𝘁. 𝗟𝘂𝗰𝗶𝗮’𝘀 𝗖𝗼𝗹𝗹𝗲𝗴𝗲 𝗢𝗹𝗱 𝗕𝗼𝘆𝘀 𝗨𝗻𝗶𝗼𝗻-னால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் 145 ஆவது வருட விழாவில் பாடுவதற்காக சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிலர் இந்தியாவில் இருந்து இலங்கை வந்துள்ளனர்.
அப்படி வந்த இளைஞர்கள் லங்காசிறி ஊடகத்திற்கு பேட்டிக் கொடுத்த பொழுது, சரிகமபா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனுபவம் குறித்து தொகுப்பாளினி மோகனா கேட்ட கேள்விகளுக்கு எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் பதில் கொடுத்துள்ளனர். “சரிகமபா மேடை ஒரு மேஜிக்..” என்றும் கூறியுள்ளனர்.
கண்ணீருடன் தொடங்கிய பயணம் பற்றி மேலதிக விவரங்களை காணொளியை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
