சரிகமப - வில் இறுதிச்சுற்றிற்கு தெரிவாகும் போட்டியாளர்... மெய்சிலிர்த்த தருணம்
சரிகமப வில் போட்டியாளர் சுஷாந்திக்கா பாடிய மோனா பாடல் அரங்கத்தில் இருந்தவர்களை கவர்ந்தது. இதன் பின் நடுவர்கள் மேடைக்கு எழுந்து வந்த காட்சி தற்போது வெளியாகி உள்ளது.
சரிகமப
சரிகமப நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கடந்த வாரம் பஞ்ச பூத சுற்றில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பாடி இருந்தனர். இதில் நன்றாக பாடிய போட்டியாளர்களுக்கு கோல்டன் பெர்போமன்ஸ் பாராட்டு கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வாரத்தில் இருந்து டிக்கட் டு பினாலே க்கான போட்டியாளர்களின் தேர்வு ஆரம்பமாக உள்ளது.
இதல் ஒவ்வொரு போட்டியாளர்களும் நன்றாக பாடினால் அவர்களுக்கு கோல்டன் பெர்பாமான்ஸ் கொடுக்கப்பட்டு அதில் சிறப்பானர்வர்களை டிக்கட் டு பினாலே க்கு தேர்வு செய்வார்கள் நடுவர்கள்.
அந்த வகையில் இந்த வாரம் சுஷாந்திக்கா பாடிய காணாளி வெளியாகி இருக்கின்றது. அதில் போட்டியாளர் சுஷாந்திக்கா 'மோனா மோனா' பாடலை ஒருவராக பாடினார்.
அவர் பாடும் போதே நடுவர்கள் ஆச்சரியப்பட்டனர். ஏனென்றால் இந்த சீசனில் இதுவரை யாரும் அப்படி பாடியதில்லை என்பதால். இவர் பாடலை பாடி முடித்ததும் நடுவர்கள் புல்லரிக்க பாடியுள்ளார் என பாராட்டுகின்றனர்.
இப்படி நிறைய பாராட்டுக்களுடன் கோல்டன் பெர்போமன்ஸ் உம் கொடுக்கப்பட்டது. இந்த வாரம் இறுதி சுற்று போட்டியாளருக்கான முதல் தேர்வில் இவர் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
காரணம் இன்னும் சிலருக்கு கோல்டன் பெர்போமன் கொடுக்கபட்டிருப்பதை காணொளியில் பார்த்திருப்போம். ஆனால் சுஷாந்திக்கா பாடியதன் பின்னர் நடுவர்கள் எல்லோரும் ஆச்சரியப்பட்டு மேடைக்கு எழுந்து வந்து பாராட்டினார்கள்.
இவர் அனைத்து விதமான பாடல்களையும் பாட திறமை பெற்றவர். அப்படி என்றால் இந்த வாரம் இவர் தான் இறுதிச்சுற்றுக்கு தெரிவாகுவார் என கூற முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW You May Like This Video |