சரிகமப அரங்கத்தை அலற வைத்த போட்டியாளர் - வித்தியாசாகர் கண்ணீர் விட்ட தருணம்
சரிகமபவில் போட்டியாளர் அருண் உணர்வு பூர்வமாக பாடல் பாட இசையமைப்பாளர் வித்தியாசாகர் கண்ணீர் விட்ட தருணம் தற்போது இணையவாசிகளை ஈர்த்துள்ளது.
சரிகமப
பிரபல இசை அமைப்பாளர் "Melody King" வித்யாசாகர் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு வாரமாக, இந்த வார #சரிகமபா நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.
மொத்தம் 26 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சியில், கடந்த வாரம் மூன்று போட்டியாளர்கள் நீக்கப்பட்ட நிலையில், தற்போது 23 போட்டியாளர்கள் தங்களின் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்த எபிசோட்டில், போட்டியாளர் அருண், "தாணடவகோணே" என்ற பாடலை ஆழமான உணர்வுடன் பாடினார். அவரது பாடலில் உணர்ச்சி பெருக்கமடைந்த வித்யாசாகர் அவர்கள், கண்களில் கண்ணீருடன் மிகுந்த அந்த தருணத்தை அனுபவித்தார்.
இச்சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இசையால் மட்டுமல்ல உணர்வால் மனதை தொட்ட தருணமாக இது அமைந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
