சரிகமப - வில் ஒரே பாடலால் இதயத்தை தொட்ட இலங்கை தமிழன்
சரிகமபவில் இந்த வாரம் ரூயட் சுற்றில் போட்டியாளர் சபேசன் பாடிய பாடல் அனைவர் இதயத்தையும் தொட்டது.
சரிகமப
கடந்த வாரம் சரிகமப நிகழ்ச்சியில் சரிகமப சங்கமம் நடைபெற்றது. இதில் சிங்கிள் பசங்க போட்டியாளர்களும் சரிகமப போட்டியாளர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தற்போது இறுதிச்சுற்றுக்கு ஒரு போட்டியாளர் சுஷாந்திக்கா தெரிவாகி இருக்கும் நிலையில் இரண்டாம் இறுதிச்சுற்று போட்டியாளர் இந்த வாரம் தெரிவு செய்யப்படுவார்.

அந்த வகையில் தற்போது இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேசன் மிகவும் திறமையாக பாடலை பாடி இருந்தார். இதற்கான காணொளி இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
அதாவது கடந்த சீசன்களின் போட்டியாளர் ரிக்ஷிதாவுடன் இணைந்து ரூயட் சுற்றில் சபேசன் பாடி இருந்தார்.
இதற்கு ரசிகர்கள் பலரும் இவருக்கு டைட்டில் வின்னராக அதிக வாய்ப்பு இருக்கிறது. சபேசனின் குரல் மெய்சிலிர்க்க வைக்கிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |