சரிகமப லிட்டில் சாம்ஸ்: மெய்சிலிர்க்கும் குரல்.. அண்ணன் தெரிவனதற்கு பாசத்தில் கண்ணீர் விட்ட தம்பி!
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப Li'l Champs Season 5 ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது, மெஹா ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
சரிகமப Li'l Champs Season 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.

அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.
அந்தவையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

சீனியர் சீசன் 5 இன் முடிவுக்கு பின்னர், சரிகமப Li'l Champs நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தனது 5 ஆவது சீசனை தற்போது ஆரம்பித்துள்ளது.
நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் திறமைமிக்க பாடகர்களாக இருக்கின்றனர். இந்நிலையில், மெஹா ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதில் தனது அண்ணன் தெரிவு செய்யப்பட்டதற்கு பாசத்தில் தம்பி கண்ணீர் விட்டதுடன், கண்ணிருடன் பாடிய மாங்குயிலே... பாடல் காட்சிகள் மற்றும் அவர்களின் பாசபிணைப்பை காட்டும் அழகிய காணொளின்று தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |