சரிகமப - டைடில் வின்னருக்கு இதுவரை கொடுத்திராத பரிசு: சீசன் 5 இற்கு அதிர்ஷ்டம்
இதுவரை எந்த ரியாலிடி ஷோக்களிலும் பரிசாக கொடுக்காத பரிசித்தொகையை சரிகமப டைடில் வின்னருக்கு கொடுக்கப்போகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப இசை நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. தற்போது இந்த நிகழ்ச்சியில் இதுவரைக்கும் யாரும் அறிவிக்காத இசை நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சி மூலம் பலர் தங்களின் திறமைகளை உலகிற்கு காட்டி அவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக்கொள்கின்றனர். சரிகமப நிகழ்ச்சிக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

அதனாலேயே இந்த நிகழ்ச்சியில் இரண்டு விதமாக நடத்தப்பட்டு வருகிறது. சீனியர்களுக்கான சரிகமப சீனியர் நிகழ்ச்சியும், ஜூனியர்களுக்காக சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் என்ற நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் தான் சீனியர்களுக்கான சீசன் 5 நிகழ்ச்சி முடிவுக்கு வந்தது. தற்போது சீசன் 5 லிட்டில் சாம்ஸ் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கடந்த வாரம் போட்டியாளர் மித்ரா மக்கள் வாக்கு அடிப்படையில் போட்டியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில் டைடில் வின்னருக்கான பரிசுத்தொகை பற்றிய விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

டைடில் வின்னர் பரிசு
சீசன் 5 நிகழ்ச்சி தொடங்கப்பட்டு சில வாரங்கள் கடந்து விட்டது. கடந்த சீசனில் திவினேஷ் டைடில் வின்னர் பட்டத்தை பறெ்றார். அதே போல இந்த சீசன் 5 குழந்தைகளும் சிறப்பாக பாடல் பாடி வருகின்றனர்.
அதாவது இந்த சீசனில் டைட்டில் வின்னருக்கு டிஆர்ஏ (DRA) நிறுவனம் ஒரு கோடி மதிப்புள்ள பிரம்மாண்டமான வீட்டை பரிசாக கொடுக்க முன் வந்து இருக்கின்றனர்.

இதற்கு முன்பு இந்த நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெறுபவர்களுக்கு 50 லட்சம் வரைக்கும் பரிசு கிடைத்திருக்கிறது.
இன்னும் பல பரிசுகளும் கிடைத்திருக்கிறது. ஆனால் இந்த பரிசுத்தொகை எந்த ரியாலிடி ஷோக்களிலும் கொடுக்கபட்டாத சாதனையை படைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |