சரிகமப லிட்டில் சாம்ஸ்: காந்த குரலில் அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த சிறுவன்!
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப Li'l Champs Season 5 ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது, மெஹா ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதில் ஒரு சிறுவன் தன் காந்த குரலில் பாடிய ரோஜா ரோஜா... என்ற பாடல் மூலம் சரிகமப Li'l Champs Season 5 இல் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.

நடுவர்களையே எழுந்து நிற்கவைத்த குறித்த சிறுவனிள் பாடல் காட்சியடங்கிய காணொளி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சரிகமப Li'l Champs Season 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப. அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவவையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது. அதில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, சரிகமப Li'l Champs நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தனது 5 ஆவது சீசனை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் போட்டியாளருக்கான தெரிவுகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் திறமைமிக்க பாடகர்களாக இருப்பதால் எத்தனை பேரை தெரிவு செய்வது என நடுவர்களுமே குழம்பிப்போயுள்ளனர்.
இந்நிலையில், மெஹா ஓடிசனில் சிறுவனொருவர் அற்புதமான குரலில் பின்னணி பாடகர்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பாடி அரங்கத்தையே மெய்சிலிர்க்க வைத்த காட்சி தற்போது இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் இவரின் குரலுக்கு ஏராளமான ரசிகர்களும் உருவாகியுள்ளனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |