சரிகமப: மழலை குரலில் நடுவர்களை மொத்தமா புடிச்சிட்டாங்களே! அரங்கமே மெய்மறந்த தருணம்
பிரபல தொலைக்காட்சியில் சரிகமப Li'l Champs Season 5 ஆரம்பமாகியுள்ள நிலையில் தற்போது, மெஹா ஓடிசனில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு வருகின்றனர்.
அதில் பங்கேற்ற மேக்ஷிதா என்ற 9 வயது சிறுதி தனது மென்மையான மழலை குரலில் மாலை பொழுதின் மயக்கத்திலே... என்ற பாடலை பாடி சரிகமப Li'l Champs Season 5 இல் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.இவர் பாடலால் அரங்கமே மெய்மறந்த தருணத்தை காட்டும் காணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சரிகமப Li'l Champs Season 5
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மக்கள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சரிகமப.
அதன் ஒரு சீசன் சீனியர்களுக்கும் அடுத்த சீசன் ஜூனியர்களுக்கும் மாறி மாறி நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவவையில், தற்போது சரிகமப சீனியர் சீசன் 5 மாபெரும் இறுதிச் சுற்றுடன் கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவுக்கு வந்தது.அதில் சுஷாந்திகா டைட்டில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து, சரிகமப Li'l Champs நான்கு சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், தனது 5 ஆவது சீசனை தற்போது ஆரம்பித்துள்ளதுடன் போட்டியாளருக்கான தெரிவுகள் இடம்பெற்று வருகின்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து சிறுவர்களும் திறமைமிக்க பாடகர்களாக இருப்பதால் எத்தனை பேரை தெரிவு செய்வது என நடுவர்களுமே குழம்பிப்போயுள்ளனர்.
மெஹா ஓடிசனில் தெரிவு செய்யப்படும் போட்டியாளர்களின் காணொளிகள் தற்போது இணையத்தில் வைராலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |