அவங்க பேசிக்கவே மாட்டாங்க.... விராட்கோலியின் அதிரடி முடிவுக்கு இது தான் காரணமா? உண்மையை உடைத்த முன்னாள் வீரர்!
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகவும், நட்சத்திர வீரராகவும் ஜொலிப்பவர் தான் விராட் கோலி. இவரின் பேட்டிங் திறமையை பற்றி சொல்லி தான் தெரிய வேண்டியதில்லை.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்னர், கிரிக்கெட் அணியின் கேப்டனாக புது அவதாரம் எடுத்தவர் விராட் கோலி. வெற்றிகர கேப்டனாக திகழும் விராட் கோலி பல சாதனைகளையும் செய்துள்ளார்.
ஆனால், ஒரு சில தொடர்களில் இந்திய அணி சிறப்பாக செயல்பட முடியாத நிலையும் நிகழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, கேப்டனாக செயல்படும் விராட், சில கிரிக்கெட் தொடர்களில் தன்னுடைய பேட்டிங்கில் கவனம் செலுத்த முடியாமல் சொதப்பியும் உள்ளார்.
இதனால், கடந்த சில நாட்களுக்கு முன் விராட் கோலி வரும் உலக கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணியின் டி-20 தொடர் கேப்டனாக செயல்பட விருப்பம் இல்லை என அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.
மேலும், நேற்றைய தினத்திலும், ஆர்சிபி அணிக்கான கேப்டன் பதவியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்தது ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
இதுகுறித்து, பத்திரிக்கையாளர்களின் சந்திப்பு ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய தேர்வாளருமான சந்தீப் பட்டேல் தெரிவிக்கையில், 'தற்போது இந்திய அணியின் கேப்டனாக திகழ்ந்து வரும் விராட் கோலி மிக சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், கேப்டன் விராட் கோலிக்கும், பிசிசிஐக்கும் ஒத்துப் போவதில்லை.
அதிலும், சொல்ல போனால் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை கூட இல்லை. இந்த நிகழ்வுகள் விராட் கோலியின் அதிரடி முடிவுக்கு முக்கிய காரணமாக இருக்க வாய்ப்புள்ளது.
இந்த விஷயத்தில் நான் விராட் கோலியின் முடிவை வரவேற்கிறேன். ஏனென்றால் விராட் ஒரு மிக சிறந்த பேட்ஸ்மேன். ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பேட்டிங்கில் சற்று பின்னடைவு ஏற்பட்டு இந்த 2021-ஆம் ஆண்டு வரை ஒரு சதம் கூட அடிக்க முடியவில்லை.
விராட் கோலி தன்னுடைய கேப்டன் பதவியிலிருந்து வெளிவந்து தன் பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்தினால் அது பாராட்டுதலுக்கு உரிய விஷயம் எனத் தெரிவித்துள்ளார்.