சாமி பட வில்லன் நடிகரா இது? ஆளே அடையாளம் தெரியாமல் மாறிய சோகம்.. அதிர்சியில் ரசிகர்கள்!
பிரபல வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவின் தற்போதையை புகைப்படமொன்று இணையத்தில் வெளியபாகி தற்போது வைரலாகி வருவதுடன் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கோட்டா சீனிவாச ராவ்
விக்ரம் நடிப்பில் வெளியாகி சூப்பரி ஹிட் அடித்த ‘சாமி’ படத்தில் ‘பெருமாள் பிச்சை’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் தான் நடிகர் கோட்டா சீனிவாச ராவ்.
தமிழில் இது தான் அவருக்கு முதல் படம் என்றாலும், மிகவும் பரீட்சையமான வில்லன் போல் நடித்திருப்பார். அதனால் முதல் படத்திலேயே பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானார்.
தொடர்ந்து அவருக்கு தமிழில் பட வாய்ப்புகள் குவிய அரம்பித்தது. தமிழில், ‘குத்து’, ‘ஜோர்’, ‘ஏய்’, ‘திருப்பாச்சி’, ‘பரமசிவன்’, ‘சத்யம்’, ‘கோ’, ‘சாமி 2’, ‘காத்தாடி’ என பல சூப்பர் ஹிட் படங்களில் நடத்து தனக்கொன ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
நடிகராக மட்டுன்றி பாடகர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட இவர் சினிமாவில் பல்வேறு துறைகளிலும் தனது திறமை வெளிப்படுத்தியுள்ளார்.
மொத்தம் 750 படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் தான் கோட்டா சீனிவாச ராவ். அதுமட்டுமன்றி 1999 ஆம் ஆண்டு முதல் 2004 ம் ஆண்டு வரையில் விஜயவாடா தொகுதி எம்எல்ஏவாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அண்மையில் பிரபல தயாரிப்பாளர் பந்த்லா கணேஷ் கோட்டா ஸ்ரீனிவாச ராவை சந்தித்துள்ளார். அதன் போது அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். குறித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருவதுடன் கோட்டா ஸ்ரீனிவாச ராவின் தற்போதைய நிலை ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் அழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |