திருமணத்தின் பின் முதல் பக்கம்... ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்ட ரோஷினி!
பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் நடிகை ரோஷினி ஹரிப்ரியன் திருமணத்திற்கு பின் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்து முதல் பக்கம் என பதிவிட்டுள்ளார். குறித்த புகைப்படங்களுக்கு இணையத்தில் லைக்குகள் குவிந்து வருகின்றது.
நடிகை ரோஷினி ஹரிப்ரியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை ரோஷினி ஹரிப்ரியன். இந்த சீரியல் இவரின் அடையானமாகவே மாறியது என்றால் மிகையாகாது.

இவரின் யதார்த்தமாக நடிப்பு திறமையால் சினிமாவில் வாய்ப்பு கிடைத்ததால், அந்த சீரியலில் இருந்து பாதியிலேயே வெளியேறி வெள்ளித்திரையில் கவனம் செலுத்தத் ஆரம்பித்தார்.
சூரி, சசிகுமார் நடிப்பில் வெளிவந்த 'கருடன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகனார்.

அதனை தொடர்ந்து காளி வெங்கட் நடிப்பில் வெளிவந்த 'மெட்ராஸ் மேட்னி' படத்தில் முக்கிய கதாப்பாரத்திரத்தில் நடித்தார்.
இறுதியாக விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

சின்னத்திரையில் மாத்திரமன்றி இவருக்கு வெள்ளித்திரையிலும் ரசிகர்களின் அமோக வரவேற்பு காணப்படுகின்றது.

தொடர்ந்தும் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்பட்ட போது, இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தியை காதல் திருமணம் செய்துகொண்டார். ரோஷினி ஹரிப்ரியனின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் திருமணத்துக்கு பின்னர் முதல் முறையாக தனது காதல் கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |