ஷிவினுக்கு ஐ லவ் யூ கூறி முத்தம் கொடுத்த ராபர்ட் மாஸ்டர்! ரக்ஷிதா முன்பு அரங்கேறிய கூத்து
பிக்பாஸ் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா மீது காதல் வயப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கொடுக்க வேண்டிய முத்தத்தை ஷிவினுக்கு கொடுத்து அதனை ரக்ஷிதாவிற்கு கொடுக்கக் கோரியுள்ளார்.
பிக்பாஸ்
தமிழில் பரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிழக்ச்சியில் கடந்த வாரம் அசல் வெளியேற்றப்பட்டதையடுத்து, அவரை நினைத்து நிவா அழுது கொண்டிருந்தார். பின்பு நிவாவிற்கு வீட்டில் இருந்து சமையல் செய்து அனுப்புவதற்கு ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டிருந்தது.
உடனே நிவா எனது அக்காவிற்கு போன் பண்ணுங்க அவங்க எடுக்கலைனா... அசல்க்கு போன் பண்ணுங்க அவன் எனக்கு சாப்பாடு செய்து தருவான் என்று கூறி அசலை மறக்கமுடியாமல் தவித்து வருகின்றார்.
இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் ரக்ஷிதா மீது ஒரு கண்ணு இருக்கும் நிலையில், பயங்கரமாக ஜெல்லு விட்டு வருகின்றார். ரக்ஷதாவின் சமையலை சாப்பிட ஆர்வமாக இருந்த ராபர்ட் மாஸ்டர் பசிக்குது என்று கூறியதற்கு ரக்ஷிதா கஞ்சி சாப்பிடக் கூறியுள்ளார்.
உடனே கோபத்துக் கொண்டு வெளியே சென்ற ராபர்ட் மாஸ்டரை ஷிவின், ஷெரினா சமாதானம் செய்து கிச்சனுக்கு அழைத்து வந்தனர்.
ஷிவினுக்கு ராபர்ட் கொடுத்த முத்தம்
பின்பு ரக்ஷிதா ராபர்ட் மாஸ்டரிடம் இனிமேல் இப்படி கோபப்படக்கூடாது என்ற சத்தியம் வாங்கிவிட்டு, நீங்கள் கஞ்சி குடிப்பீங்கனு தானே நான் சொன்னேன் என்று கூறி அவரும் கோபித்துள்ளார்.
பின்பு இருவரும் சமாதானம் ஆகியதோடு, ராபர்ட் மாஸ்டர் சமையல் செய்த பாத்திரத்திலேயே சாப்பாடு போட்டு சாப்பிட்டுவிட்டு ரக்ஷிதாவின் சுமையலை புகழ்ந்தார்.
ஒரு கட்டத்தில் ஷிவினுக்கு முத்தம் கொடுத்துவிட்டு இதனை நான் கொடுத்ததாக ரக்ஷிதாவிற்கு கொடுத்துவிடு என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
முத்தம் மட்டும் இல்லாமல் ஐ லவ் யூ என்ற வார்த்தையையும் கூறியுள்ளார்.