சப்பாத்தி தோசைக்கு சாம்பார் இல்லையா? இந்த பொடி சேர்த்து சாப்பிடுங்க சுவை பிரமாதம்
வீட்டில் இட்லி தோசை செய்து வைத்திருந்தால் அதற்கு கட்டாயம் சாம்பார் சட்னி செய்வது அவசியம். ஆனால் இப்போது அவசரமாக சாப்பிட வேண்டும் எதுவும் செய்ய நேரமில்லை என்னும் சூழ்நிலையில் வீட்டில் செய்யும் பொடியை பயன்படுத்துவது நல்லது.
இது உணவிற்கு ஒரு சிறந்த சுவையை கொடுக்கும் செய்து பாருங்கள். இது மட்டுமல்லாமல் தோசை இட்லி சாதம் போன்ற உணவுகளுடன் சேர்த்து நெய் கலந்து சாப்பிட்டால் பிரமாதமாக இருக்கும். இதை எப்படி செய்வது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வறுத்த மசாலா செய்ய தேவையான பொருட்கள்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- கொத்தமல்லி விதை -1.5 டீஸ்பூன்
- வெந்தயம் - 1 டீஸ்பூன்
- சோம்பு- 1 டீஸ்பூன்
- கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்
- கிராம்பு - 2-3
- ஓமம் – ½ ஸ்பூன்
- கசூரி மேத்தி - 1 டீஸ்பூன்
- மாங்காய் தூள் அல்லது அமச்சூர் பவுடர் - 1 டீஸ்பூன்
- கருப்பு உப்பு - 1 டீஸ்பூன்
- சாதாரண உப்பு - 1 டீஸ்பூன்
- உலர்ந்த சிவப்பு மிளகாய் - 4
- பெருங்காயம் - 1 டீஸ்பூன்
- கறிவேப்பிலை - 4-5 இலைகள்
- காஷ்மீர் சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- ஆரிகனோ – 1 டீஸ்பூன்
மசாலா செய்வது எப்படி?
முதலில் செய்ய வேண்டியது மசாலாப் பொருட்களை வறுக்க வேண்டும். அதற்கு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் சூடாக்கி, சீரகம், கொத்தமல்லி விதை , பெருஞ்சீரகம், வெந்தயம், கருப்பு மிளகு, கிராம்பு, ஓமம் மற்றும் உலர்ந்த சிவப்பு மிளகாய் என அனைத்தையும் சேர்த்து, அவை லேசான பொன்னிறமாகவும் நறுமணமாகவும் மாறும் வரை வறுக்க வேண்டும்.
பின்னர் வறுத்த மசாலாப் பொருட்களுடன் கொஞ்சம் கறிவேப்பிலையைச் சேர்த்து அதனை ஒரு 2 நிமிடங்கள் வறுக்க வேண்டும். இது மசாலாவிற்கு ஒரு சிறப்பு சுவையை தரும். இப்போது வறுத்த மசாலாப் பொருட்களை தனியே எடுத்து ஆற விட வேண்டும்.
இது ஆறிய பின்னர் மிக்ஸியில் போட்டு மொரமொரப்பாக அரைக்க வேண்டும். பின்னர் அரைத்த பொடியுடன் கசூரி மேத்தி, உலர்ந்த மாங்காய் தூள், கருப்பு உப்பு, சாதாரண உப்பு, ஆரிகனோ, பெருங்காயம் மற்றும் காஷ்மீரி சிவப்பு மிளகாய்த் தூள் என்பவற்றை சேர்க்க வேண்டும்.
பின்னர் இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து காற்று உள்ளே செல்லாத பாட்டிலில் அடைத்து வைக்க வேண்டும். இந்த மசாலா பொடியை நீண்ட நாட்களுக்கு அப்படியே பயன்படுத்தலாம். வீட்டில் தோசை, சப்பாத்தி அல்லது பராத்தா சுடும்போதெல்லாம் இந்த பொடியை தூவி சுட வேண்டும்.
இதை தூவியவுடன் உணவின் சவை இரட்டிப்பாகும். இது தவிர இதில் பயன்படுத்தப்படும் ஒவ்வொரு மூலிகை பொருட்களும் உடலுக்கும் உடல் உறுப்புக்களுக்கும் நன்மை தரும். நோய்களில் இருந்து விடுபடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
