பெரிய பெரிய பிரச்சனைகளை சுலபமாக சரிசெய்யலாம்! கற்பூரம் ஏற்றும் போது இதை மறக்காதீங்க
பொதுவாக வீட்டில் நிறைய பிரச்சினைகள் இருக்கும், அதனை நாம் சில பரிகாரங்கள் மூலம் கட்டுபடுத்தலாம். அந்த வகையில் நம்பிக்கையுடன் பரிகாரம் செய்யும் போது பலன் இரட்டிப்பாக கிடைக்கும்.
இந்த பதிவில் வீட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்ககூடிய வகையிலான பரிகாரத்தை பற்றி தெரிந்து கொள்ளவோம்.
வீட்டில் செய்யக்கூடிய எளிய பரிகார முறைகள்
ஒரு சிறிய தட்டை எடுத்து, அதன் மேல் ஒரு மண் அகல் விளக்கை வைத்து, அதில் ஒரு கட்டி கற்பூரத்தை(சூடம்) ஏற்றிக்கொள்ள வேண்டும்.
அதில் இரண்டு கிராம்பு சேர்க்க வேண்டும், கற்பூரத்தோடு கிராம்பு சேர்ந்து எரியும் போது வாசணை மிகு புகை வெளியேறும்.
அந்த புகையினை தமது வீடு முழுவதும் காட்ட வேண்டும். இவ்வாறு செய்தால் வீட்டிலுள்ள எதிர்மறையான சக்திகள் நீங்கி வீட்டில் நிம்மதி நிலவும்.
அதேபோன்று நாம் செவ்வாய், வெள்ளி தினங்களில் வீட்டில் பூஜை செய்யும் போது காட்டும் கற்பூரத்தோடு வெல்லம் மற்றும் டைமன் கற்கண்டுகளை சேர்க்கலாம்.
இவ்வாறு சேர்த்து கற்பூரம் காட்டப்படுவது அக்கினி பகவானை சாந்தியடைய செய்வதற்கான பரிகாரமாக கருதப்படும்.
இதனால் வீட்டில் தீயாய் இருக்கும் பிரச்சினைகள் அனைத்தும் சுமூகமான ஒரு முடிவுக்கு வரும்.
அக்னி பகவானிடம் இனிப்பை பிரசாதமாக கொடுத்து, வீட்டு பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்வதனால் வீட்டு பிரச்சினைகளை தீர்க்ககூடியளவு தைரியம் ஏற்படும்.