இலங்கை றீ(ச்)ஷா - வில் அமோகமாக அறுவடை செய்த மரவள்ளி கிழங்குகள்
கிளிநொச்சியில் (kilinochchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணையில் தற்போது மரவள்ளி கிழங்குகள் அறுவடை செய்யபட்டுள்ளது.
கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் பல்வேறு பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு,கோழிவளர்ப்பு உட்பட பல்வேறு விடயங்கள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த பண்ணையில் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக பல்வேறுபட்ட புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், எவ்வித இரசாயண பதார்த்தங்களும் உபயோகிக்காமல் இயற்கை முறையில் பயிரிடப்பட்ட பல தாவர பயிர்ச்செய்கையை பார்த்திருப்போம். அதில் ஒரு பங்காக தற்போது மரவள்ளி கிழங்கு அறுவடையை வெற்றிகரமாக முடித்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |