பாரம்பரிய உடையில் அலுவலகத்தி்ற்கு வந்த முதல்வர் விஜய்.. இதுதான் காரணமா?
முதலமைச்சர் விஜய் திடீரென்று பாரம்பரிய உடையான பட்டு வேட்டி சட்டையில் வந்ததற்கான காரணம் என்ன என்று இந்த பதிவில் விரிவாக காணலாம்.
முதல்வர் விஜய்
நடிகரும், தவெக கட்சி தலைவருமான விஜய் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதுடன், சில கட்சிகளுடன் கூட்டணி வைத்து தற்போது முதலமைச்சராகவும் மாறியுள்ளார்.
பல தடைகளை தாண்டி முதலைமைச்சர் இருக்கையில் அமர்ந்துள்ள விஜய்யின் அடுத்தடுத்த செயல்கள் மக்களால் பெரிதும் கவனிக்கப்பட்டு வருகின்றனர்.

அண்ணா என்று மக்களின் குரல் எங்கு கேட்டாலும் உடனடியாக அதற்கு ரியாக்ஷன் கொடுத்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகின்றார். இலங்கை நாடாளுமன்றம் வரை விஜய் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
காரணம் என்ன?
நடிகர் விஜய் முதலமைச்சராக பதவியேற்ற நாள் முதல் இந்நாள் வரை அவர் எங்கு சென்றாலும் அவர் கோட் சூட்டில் தான் எல்லா நிகழ்வுகளுக்கும் செல்கிறார்.
ஆனால் இன்று அவர் திடீரென்று பட்டு வேட்டி சட்டையில் வந்துள்ளார். அதற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது.

அவரது மேலாளரான ஜெகதீஷ் அவரின் புதுமனை புகுவிழா இருந்ததால், அதில் பங்கு பெறுவதற்காக வேஷ்டி சட்டையில் வந்திருக்கிறார். அருகிலேயே தனது அலுவலகம் இருந்ததால் அதே உடையில் செயலகத்திற்கு சென்றுள்ளார்.
இதனை அதவானித்த நெட்டிசன்கள் “மாடர்ன் லுக்கிலும் மாஸ்… பாரம்பரிய உடையிலும் கம்பீரம்!” என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |