24 மணி நேரத்தில் நீக்காவிட்டால்... சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் - ரஷ்மிகா பதிவு
தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டவர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை எடுக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நடிகை ராஷ்மிக மந்தானா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராஷ்மிக மந்தானா
நடிகை ராஷ்மிகா மந்தானாவிற்கும் விஜய் தேவர்கொண்டாவிற்கும் கடந்த மாதம் 26ம் திகதி ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
திருமணமாகி சில நாட்களே ஆகிய சமயத்தில் தன்னுடைய தனிப்பட்ட விடயங்களை சமூக வலைத்தளத்தில் தவறான நோக்கத்தில் பரப்புவதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு எச்சரிக்கை பதிவை பதிவிட்டுள்ளார்.

பதிவு
என்னுடைய தனிப்பட்ட விடயங்களை தவறான நோக்கத்தில் பரப்புகின்றனர். சுமார் 8 வருடங்களாக இந்த விடயம் நடக்கிறது. அது அப்போது என்னை மட்டும் தான் தாக்கும் என்பதால் நான் பொறுத்துக்கொண்டேன் இனியும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது.
24 மணி நேரத்தில் என்னைப் பற்றி பரவும் தவறான தகவல்களையும் ஊடகத்தினர், தனிநபர்கள், இன்ஃபுளூயன்ஸர்கள் அனைவரும் நீக்க வேண்டும்.

இல்லாவிட்டால் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” இது முழுக்க முழுக்க ஒருவரின் ஒருவரின் தனியுரிமை மீதான தாக்குதல். தவறான தகவல்களையும், அவதூறான தகவல்களையும் பரப்பி வருகிறார்கள்.
வாழ்க்கையில் அடுத்த கட்டத்துக்கு முன்னேறி, வளர்ச்சியை நோக்கி நேர்மறையைப் பரப்பும் அதே வேளையில், ஒரு சிலர் மற்றொரு நபரின் கண்ணியத்தையும் அமைதியையும் விலையாகக் கொடுத்து வெறுப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது” என ரஷ்மிக மந்தானா கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
— Rashmika Mandanna (@iamRashmika) March 12, 2026
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |