குழந்தை தனமாக தனக்கு தானே வாழ்த்து பாடல் பாடும் ராஷ்மிகா... வைரலாகும் காணொளி!
நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்கு தானே குழந்தை தனமாக பாடல் பாடி பிறந்த நாள் வாழ்த்து கூறிக்கொள்ளும் செம கியட்டான காணொளி வெளியாகி தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ராஷ்மிகா மந்தனா
நேஷனல் கர்ஷ் என ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா. 2016ஆம் ஆண்டு 'கிரிக் பார்ட்டி' எனும் கன்னட திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார்.
இதன்பின் தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்து தென்னிந்திய ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துவிட்டார்.
பின்னர் தமிழில் சுல்தான், வாரிசு உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார்.
சில மாதங்களுக்கு முன்னர் அவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் கிட்டத்தட்ட 2000 கோடி வசூலை நெருங்கி இருப்பதுடன் இந்திய சினிமாவில் வசூல் ரீதியாக முதல் நிலை வகிக்கின்றது.
அதனை தொடர்ந்து ராஷ்மிகா நடிப்பில் Chhaava என்ற ஹிந்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
திரையில் ஜோடியாக வலம் வந்த விஜய் தேவர்கொண்டா- ராஷ்மிகா மந்தனா இருவரும் பல வருடங்களாக வெளியுலகிற்கு தெரியாமல் டேட்டிங் செய்து வருகிறார்கள்.
மாறாக இருவரும் அவர்களின் காதல் விவகாரம் குறித்து இதுவரையில் வாய் திறக்கவில்லை. இருப்பினும் அவர்கள் காதலிப்பது உலகறிந்த விடயம் தான்.
ராஷ்மிகா, நேற்றைய தினம் தன்னுடைய 29ஆவது பிறந்த நாளை வெளிநாட்டில் கடற்கரை அருகே திறந்த விடுதியொன்றில் கொண்டியிருந்தார்.
இவர், விஜய் தேவர்கொண்டாவுடன் பிறந்த நாள் கொண்டாட வெளிநாட்டுக்கு சென்ற செய்தி வெளியாகி இணையத்தில் வைரலானது.
இருவரும் விமானநிலையத்தில் ஒன்றாக சென்ற புகைப்படங்கள் குறித்த விடயத்தை உறுதிப்படுத்தியது.
இந்நிலையில் குழந்தை தனமாக தனக்கு தானே பிறந்த நாள் வாழ்த்து கூறிக்கொண்டு ராஷ்மிகா தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருவதுடன் வாழ்த்துக்களையும் குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |