இலங்கை தமிழரை மணந்த நடிகை வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்... உச்சக்கட்ட மகிழ்ச்சியில் பதிவிட்ட புகைப்படம்
நடிகை ரம்பா தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் கனடா வீட்டில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
தமிழ் திரையுலகின் ஒரு சமயத்தில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ரம்பா. இவர் இலங்கை தமிழரான இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் வாழ்ந்து வருகின்றார்.
இந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். ரம்பா நேற்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
இதை தொடர்ந்து கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைபடங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், என் கியூட்டான சிறிய உலகம் என பதிவிட்டுள்ளார். ரம்பாவின் கணவர் இந்திரன் கனடாவில் தொழிலதிபராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி, தனது இளமைக் கால புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ள ரம்பாவிற்கு, ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.