50 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட ராஜ்கிரண்... இவ்வளவு அழகான பிள்ளைகளா? அரிய புகைப்படம்
தனது கம்பீரமான நடிப்பினால் ஒட்டுமொத்த ரசிகர்களை தன்வசப்படுத்தியிருக்கும் ராஜ்கிரன், அன்று மட்டுமின்றி இன்றும் கதாநாயகனாகவும் கலக்கி வருகின்றார்.
எளிய குடும்பத்தில் பிறந்த இவர் சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்து, நடிகராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்தார்.
காதற் மொகிதீன் என்ற தனது பெயரை ராஜ்கிரண் என்று மாற்றினார். இவர் சுமார் 30 படங்களே நடித்திருந்தாலும், அனைத்து படத்திலும் இவரது நடிப்பு வேற லெவல் என்று தான் கூற வேண்டும்.
இவர் நாயகனாக நடித்த அரண்மனைக்கிளி,என் ராசாவின் மனசிலே ஆகிய படங்கள் இன்றும் மக்கள் மத்தியில் ஹிட்டடித்தது. பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நந்தா, சண்டக்கோழி, பாண்டவர் பூமி ஆகிய சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்திருந்தார்.
அதுமட்டுமல்லாமல் தனுஷ் இயக்கத்தில் இவர் கதாநாயகனாக நடித்த பவர் பாண்டி திரைப்படம் அசத்தல் ஹிட்டடித்தது.
இவரது முதல் திருமணம் வாழ்க்கை கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த நிலையில், தனது 50 வயதில் ராஜ்கிரண் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில், இவர்களது குடும்ப புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வருகின்றது.