கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார் நடிகர் ரஜினிகாந்த்! மகள் வெளியிட்ட புகைப்படம்
நடிகர் ரஜினிகாந்த், கொரோனா தடுப்பூசியை இன்று (13) செலுத்திக்கொண்டார்.
நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
சன் பிக்சா்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் ரஜினி, குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலா் நடிப்பில் உருவாகி வருகிறது.
கொரோனா பரவல், ரஜினியின் உடல்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தடைபட்டது.
ரஜினியின் உடல்நிலை சீரானவுடன் சென்னையிலும் பிறகு ஹைதராபாத்திலும் ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு கடும் கட்டுப்பாடுகளுடன் தொடங்கப்பட்டது.
Our Thalaivar gets his vaccine 👍🏻 Let us fight and win this war against Corona virus together #ThalaivarVaccinated #TogetherWeCan #MaskOn #StayHomeStaySafe pic.twitter.com/P8Gyca4zdF
— soundarya rajnikanth (@soundaryaarajni) May 13, 2021
படப்பிடிப்பை முடித்துக்கொண்டு நேற்று சென்னை திரும்பினார் ரஜினி. இதையடுத்து கொரோனா தடுப்பூசியை இன்று (13) போட்டுக்கொண்டார்.
இந்த தகவலை அவருடைய மகள் செளந்தர்யா, ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.