முகம் அலங்கோலமாக மாறியதால் ரைஸா கேட்ட நஷ்டஈடு... மானநஷ்ட வழக்கு பதிவுசெய்ய தயார்! பெண் பகீர்
அழகு நிலையத்தில் எடுத்துக்கொண்ட சிகிச்சையால் அலங்கோலமாக மாறிய தனது முகம் மாறியதால், நடிகை ரைசா நஷ்டஈடு கேட்டு குறித்த அழகுநிலைய உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
பிரபல ரிவியில் கடந்த 4 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ரசிகர்களின் வரவேற்பினைப் பெற்றவர் தான் நடிகை ரைஸா.
பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, சதாநேரமும் மேக்கப் செய்துகொண்டே இருப்பார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு பல படங்களில் நடித்தும் வருகின்றார்.
இந்நிலையில் தனது அழகினை இன்னும் அதிகரிக்க அழகுநிலையத்திற்கு சென்று பைரவி செந்தில் என்பவரிடம் அழகு சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.
ஆனால் அவரது விகாரமாக காட்சியளித்து அலங்கோலமாக மாறியதையடுத்து, குறித்த பெண்ணிடம் 1 கோடி ரூபாய் நஷ்டஈடு அளிக்க கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதற்கு தனது தரப்பு நியாயத்தினையும் தெரிவித்த நிலையில், தற்போது பைரவி ரைசாவிற்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அந்த நோட்டீசில், “எனது சிகிச்சை குறித்து நடிகை ரைசா அவதூறு பரப்பி வருகிறார். அவர் மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்க வேண்டும். அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது மானநஷ்ட வழக்கு தொடரப்படும்.” என தெரிவித்துள்ளார்.
மேலும் ரைசா தனது நற்பெயரை கெடுக்க முயற்சிப்பதாகவும் மருத்துவர் பைரவி குற்றம்சாட்டியுள்ளார்.