குழந்தையைக் காப்பாற்றிய ஹீரோ! பரிசுத்தொகையை என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
மும்பையில் ரயில் நிலையத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி தாயுடன் சென்ற சிறுவன் தண்டவாளத்தில் தவறிவிழுந்ததையடுத்து, மயூர்ஷெல்கே என்ற ரயில்வே பணியாளர் ஹீரோவாக செயல்பட்டு காப்பாற்றினார்.
இதுகுறித்த காணொளி இணையத்தில் வைரலாகியதையடுத்து, சிறுவனைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு பாராட்டுகள் குவிந்தது மட்டுமின்றி அவருக்கு ரூபாய் 50 ஆயிரம் பரிசுத்தொகையும், ஜாவா நிறுவனம் ஒரு புதிய இருசக்கர வாகனத்தினையும் பரிசாக வழங்கியுள்ளது.
Very proud of Mayur Shelke, Railwayman from the Vangani Railway Station in Mumbai who has done an exceptionally courageous act, risked his own life & saved a child's life. pic.twitter.com/0lsHkt4v7M
— Piyush Goyal (@PiyushGoyal) April 19, 2021
இந்த நிலையில் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையில் ஒரு பகுதியை தான் காப்பாற்றிய சிறுவனின் படிப்பு செலவுக்காக மயூர்ஷெல்கே வழங்கியுள்ளார்.
இந்த தகவல் தெரிந்ததும் அவரது மதிப்பு இன்னும் பல மடங்கு மக்கள் மத்தியில் உயர்ந்தியதோடு, மேலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
[P3TVQ ]