புத்தாண்டில் பக்கா குடும்ப பாங்கினியாக மாறிய ரச்சிதா மகாலட்சுமி... குவியும் லைக்குகள்
நடிகை ரச்சிதா மகாலட்சுமி புது வருட ஸ்பெஷலாக அழகிய சேலையில் பக்கா குடும்ப பாங்கினியானவே மாறி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ரச்சிதா மகாலட்சுமி
சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்ற நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரச்சிதா மகாலட்சுமி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றார்.

சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த, தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் கடந்த சில வருடங்களாக இவர்கள் இருவரும் கருத்து வேறுப்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
புதிய வீடு வாங்கி அம்மாவுடன் குடியேறிய ரச்சிதா அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 6இல் கலந்து கொண்டார்.

தற்போது படங்களில் நடித்து வரும் ரச்சிதா, சினிமாவில் அறிமுகமாகிய பின்னர் அண்மை காலமாக தாராள கவர்ச்சி காட்டி சமூக ஊடகங்களிலும் புகைப்படங்களையும் காணொளிகளையும் வெளியிட்டு வருகின்றார்.

மேலும் சமீப காலங்களில் தனிமையில் சுற்றுலா சென்ற புகைப்படங்களையும், காணொளிகளையும் அதிகமாக பகிர்ந்து வந்தார். அதன் பின்னர் நடிகை விசித்தாவுடன் நெருங்கிய நட்புடன் பழகி வருகின்றார்.

இந்நிலையில், புத்தாண்டு தினத்தில் சேலையில் கோவிலுக்கு சென்று, ரசிகர்களை ஈர்க்கும் வகையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |