மகா சிவராத்திரி தினத்தில் மொத்தமாக மாறிய ராஷி கண்ணா! வாயடைத்துப்போன ரசிகர்கள்
இதுவரையில் காலமும் செம ஹொட் லுக்கில் ரசிகர்களை ஈரத்த நடிகை ராஷிகண்ணா மகா சிவராத்திரி நாளில் தெய்வீக தன்மையுடன் பார்வதி தேவி போன்ற அழங்காரத்துடன், சிவன் பாடலை பாடி... அர்த்தம் பொதிந்த ஒரு பதிவுடன் தற்போது வெளியிட்டுள்ள காணொளி இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
ராஷிகண்ணா
நடிகை ராசி கண்ணா தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

ஜான் ஆபிரகாம் நடிப்பில் வெளியான மெட்ராஸ் கஃபே என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.
இந்த திரைப்படம் பெரியளவில் ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கு மலையாளம் என இவருக்கு பட வாய்ப்புகள் இவருக்கு குவிய ஆரைம்பித்தது.

அதனை தொடர்ந்து அடங்க மறு,அயோத்தி , சீனிவாச கல்யாணம், திருச்சிற்றம்பலம் , துக்ளக் தர்பார் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்து தமிழிலும் தனக்கென ஒரு ரிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான அரண்மனை திரைபடத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியதுடன், தமன்னாவுடன் இணைந்து கிளாமராக நடனமாடிய அச்சோ அச்சோ பாடல் பட்டிதொட்டியெல்லாம் பிரபல்யமானது.

இந்நிலையில், ராஷிகண்ணா ஒரு பாடல் காணொளியுடன், இந்த தெய்வீக நாளில், நம்பிக்கை, சரணாகதி மற்றும் நன்றியுணர்வு ஆகியவற்றின் இடத்திலிருந்து பாடப்படும் ஷிவ் கைலாஷோன் கே வாசி என்ற பாடலை மகாதேவனுக்கு எனது பிரார்த்தனையாக வழங்குகிறேன்.

என் இதயத்திற்கு நெருக்கமான ஒரு கனவு, அது அமைதி, வலிமை மற்றும் ஆசீர்வாதங்களைத் தரும் என்ற நம்பிக்கையுடன், அதை ஒரு பிரசாதமாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ஹர் ஹர் மகாதேவ்... என குறிப்பிட்டு தற்போது வெளியிட்டுள்ள பதிவு இணையத்தில் படுவைரலாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |