சிறுவனின் வருகைக்காக காத்திருந்த நாய்! ஏக்கத்தில் அரங்கேறிய ஆட்டம்
பள்ளிக்கு சென்ற சிறுவனுக்காக நாய்க்குட்டி ஒன்று ஏக்கத்தில் காத்திருந்த தருணத்தில் சிறுவனைக் கண்டதும் போட்ட ஆட்டம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிறுவனைக் கண்டதும் நடனமாடிய நாய்
பொதுவாக குழந்தைகளுடன் வீட்டில் வளரும் செல்லப்பிராணி சேர்ந்துவிட்டால், அங்கு குதூகலத்திற்கு பஞ்சமே இருக்காது.
இங்கு நாய் ஒன்று எஜமான் வீட்டிலிருக்கும் சிறுவன் பள்ளிக்கு சென்று திரும்பும்நிலையில், அவன் வருகைக்காக ஏக்கத்துடன் சாலையில் காத்துக் கொண்டிருந்துள்ளது.
உடனே சிறுவன் பள்ளி வாகனத்திலிருந்து இறங்கியதை அடுத்து, அவனைக் கண்டதும் ஆட்டம் போட்டு வரவேற்றதுடன், அவன் மீது ஏறி தனது பாசத்தினை வெளிக்காட்டியுள்ளது.
குறித்த காட்சி பல லட்சம் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளது.