ஏழை காய்கறி விற்பனையாளரின் வண்டியை எட்டி உதைத்த போலீஸ் அதிகாரி! கடும் சர்ச்சையை ஏற்படுத்திய அதிர்ச்சி காட்சி
இந்தியாவில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், நாட்டின் பல பகுதிகளில் முழு ஊரடங்கு அல்லது பகுதி ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளன.
இதனால் வாகனங்கள் மற்றும் கடைகள் இயங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகளை எந்தவித இடர்பாடுகளும் இன்றி செயல்படுத்த காவல்துறை அதிகாரிகள் தங்களால் முடிந்தவரை பல முயற்சிகளை செய்து வருகின்றனர்.
Absolutely shameful and unacceptable. I have suspended SHO Phagwara. Such misbehaviour will not be tolerated at any cost and those who indulge in it will have to face serious consequences. https://t.co/terAynz6ao
— DGP Punjab Police (@DGPPunjabPolice) May 5, 2021
இந்தநிலையில், பஞ்சாபில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்டு வந்த காய்கறி வண்டியை அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதிகாரியின் வீடியோ வைரலாகியுள்ளது.
அந்த அதிகாரியின் செயல் அனைவரையும் கோபத்திற்கு உள்ளாகியுள்ளது. ஊரடங்கை செயல்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்ட பக்வாரா பகுதி எஸ்.எச்.ஓ நவ்தீப் சிங், தெரு விற்பனையாளர் ஒருவரின் காய்கறி வண்டியை எட்டி உதைப்பதை காணலாம்
.
மேலும் இணையத்தில் வைரலான இந்த வீடியோ பஞ்சாப் காவல்துறை அதிகாரிகளின் கவனத்திற்கும் சென்றது. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரி மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.