பசியால் கண்ணீர் விட்டு அழுத பிரியங்கா: அண்ணாச்சி கூறிய ஆறுதல்
பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு குறைவாக இருப்பதால் பிரியங்கா அண்ணாச்சியிடம் கண்கலங்கியுள்ளார்.
முதலில் மகிழ்ச்சியாக செல்லும் பிக்பாஸ் வீட்டில் அடுத்தடுத்த வாரங்களில், போட்டியாளர்கள் விளையாடும் விதத்தினை வைத்தே அவர்களுக்கான உணவுப்பொருட்கள் வழங்கப்படும்.
தற்போது இரண்டு வாரங்களே ஆகிய நிலையில், உணவு பற்றாக்குறை இருப்பதாக சொல்லி பிரியங்கா கண்ணீர் விட்டு அழுது இருக்கிறார். தனக்கு சாப்பிட எதாவது வேண்டும் என சொல்லி கொண்டிருந்தவர் திடீரென அழவே ஆரம்பித்துள்ளார். பின்பு இமான் அண்ணாச்சி ஆறுதல் கூறினார்.
அதன் பின்பு ராஜு பிரியங்காவிற்காக ஆம்லெட் செய்து ஸ்பெஷலாக சாப்பாடு கொண்டு வந்த நிலையில், அதையும் தெரியாமல் கீழே தட்டிவிட்டதால் பிரியங்கா அதிர்ச்சியடைந்தார்.
அப்பொழுது ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் வீடியோ காலில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் உடன் அவர்கள் படத்தின் ப்ரோமோஷனுக்காக பேசிய போது, அவர்களிடமும் பிரியங்கா சாப்பாடு அனுப்பி வைக்க முடியுமா என்று கேட்டார்.
தொகுப்பாளினியாக இருக்கும் போதே பிரியங்கா சாப்பாட்டு பிரியர் என்ற தெரிந்த நிலையில், தற்போது பிரியங்கா சாப்பாடு என்று கேட்டு வருகின்றார். இதற்கு கமல் வந்து என்ன கூறுகின்றார் என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.