73 ஆண்டுகள் மகிழ்ச்சியான வாழ்க்கை.. ஆனால் மகாராணி மீது ஒரே ஒரு புகார் இருக்காம்!!!
பெரும்பாலான கணவர்களுக்கு தங்கள் மனைவி மீது ஏதாவது புகார் இருக்கும்... இப்போதெல்லாம் என் மனைவி சரியாக சமைப்பதில்லை, பிள்ளைகள் பிறந்ததும் என்னை மறந்துவிட்டாள் என்று ஏதாவது ஒரு புகார் சொல்வார்கள் ஆண்கள்.
ஆனால், பிரித்தானிய மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப்புக்கு மனைவி மீது ஏதாவது புகார் உண்டா? அவர் அப்படி மனைவியைப் பற்றி ஏதாவது கூறியிருக்கிறாரா?
ஆம் என்கிறார் இளவரசர் பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் Gyles Brandreth.
ஒரே ஒரு முறை, என்ன இவர், எப்போது பார்த்தாலும் தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்கிறார், அப்படி யாரிடம்தான் பேசிக்கொண்டிருக்கிறார் என்று Gylesஇடம் கூறினாராம் இளவரசர் பிலிப்.
குதிரைப் பந்தயத்தில் ஆர்வமுடைய மகாராணியார், அவரது பந்தய மேலாளரிடம் தனது குதிரைகளைக் குறித்துத்தான் பேசியிருப்பார் என்றாராம் Gyles. அது தவிர்த்து ஒருமுறை கூட மகாராணியாரைக் குறித்து அவரது கணவர் எந்த புகாரும் கூறியதில்லையாம்.
மனைவிக்காக தனக்குப் பிடித்த வேலையையே விட்டவராயிற்றே இளவரசர் பிலிப், அப்படியிருக்கும்போது, காதல் மனைவி மீது புகார் கூறுவாரா என்ன?